வங்கதேசத்திற்கு வழங்கும் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

0

அமெரிக்க அதிபர் டிரம்ப், வங்கதேசத்திற்கு வழங்கும் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப், புதிய அமெரிக்க அதிபராக கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவது உட்பட பல நிர்வாக உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

வெளிநாட்டு உதவி மற்றும் பல்வேறு சர்வதேச உதவித் திட்டங்களை 90 நாட்கள் முடக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான இராணுவ உதவி மட்டுமே விதிவிலக்கு. இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து 85 நாட்களுக்குள் ஜனாதிபதி டிரம்பிற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கத்திற்கு வழங்கும் நிதி உதவியை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச அரசுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் வங்கதேசம்தான் அதிக அளவில் அமெரிக்க உதவியைப் பெறும் நாடு, மேலும் இந்த உத்தரவு அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு பெரிய நெருக்கடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=K8pWr9CL7RM&w=853&h=480]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here