ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி ஸ்ரீ மஹந்த் சத்யேந்திர தாஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத சடங்குகள் மற்றும் வேதங்களில் நிபுணராக இருந்த மஹந்த், தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்ததாகவும் பிரதமர் அவரைப் பாராட்டியுள்ளார்.
எக்ஸ் பதிவில், அவர் கூறியதாவது,
“ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி ஸ்ரீ மஹந்த் சத்யேந்திர தாஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மத சடங்குகள் மற்றும் வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற மஹந்த் ஜி, தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார்.
நாட்டின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடவுள் பலம் அளிக்க பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!