அமித் ஷாவின் வருகை தமிழ்நாட்டில் திருப்புமுனை ஏற்படுத்தும்: அர்ஜுன் சம்பத்

0

அமித் ஷாவின் வருகை தமிழ்நாட்டில் திருப்புமுனை ஏற்படுத்தும்: அர்ஜுன் சம்பத்

திருவள்ளூர் மாவட்டம் சென்னிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஏழை முஸ்லிம்கள் பயனடையும் வகையில் வஃக்பு திருத்த சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அனைத்து முஸ்லிம்களும் இதனை வரவேற்கின்றனர். அரசியல் நோக்கத்திற்காக சிலர் மட்டுமே எதிர்ப்பை உருவாக்குகிறார்கள்,” என்றார்.

தொடர்ந்து, “இப்போது கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் விழாக்கள், கட்சி விழாவை போல மாறிவிட்டது. விஐபி கலாச்சாரம் காரணமாக பொதுப் பக்தர்கள் வழிபாட்டில் இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைவரும் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்,” என அறிவுறுத்தினார்.

பாஜகவுக்குள் நிகழும் தலைமைக் கட்டமைப்பு மாற்றங்களைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன் சம்பத், “பாஜகவிற்கு யார் தலைவராக வந்தாலும் அந்தக் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள். தற்போது அண்ணாமலை ஒரு அற்புதமான தலைவராக உள்ளார். அவரை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது சேவை தொடர்ந்து மக்களுக்காக இருக்கும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு, மாநில அரசியலில் முக்கிய தலைவர்களாக மாறிவரும் தேசியக் கட்சி தலைவர்களின் பயணங்கள் மற்றும் நடவடிக்கைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு குறியீடாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here