மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.பி.க்களை இடைநீக்கம்

0

 

மாநிலங்களவை ஒன்று (ஜன.3) காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய சுஷில் குப்தா, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்கள்  விவசாயிகளுக்கு பலனளிக்கப்போவதில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here