அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமலா ஹாரிஸ், இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உள்ள நிலையில், காசாவில் மனிதர்கள் எவ்வளவு துன்பப்படுவர் என்பது குறித்து நெதன்யாகுவுக்குத் தனது கவலையைத் தெளிவுபடுத்தியதாகக் கூறினார்.
இது குறித்து அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார். இதன் மூலம் இஸ்ரேல் விவகாரத்தில் கமலா ஹாரிஸ் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.