ஹிஸ்புல்லாவும் சுரங்கங்களும்… இஸ்ரேல் ஓயாமல் வேட்டையாடுகிறது – சிறப்பு பார்வை!

0

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம் அமைக்க வடகொரியா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.

அக்டோபர் 1 ஆம் தேதி, லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலிய இராணுவம், ஹிஸ்புல்லாவின் ரகசிய சுரங்கங்களை கண்டுபிடித்தது. தெற்கு லெபனானில் உள்ள Ayta ash Shab என்ற சிறிய கிராமத்தில், இஸ்ரேலிய இராணுவம் 12 க்கும் மேற்பட்ட நிலத்தடி சுரங்கங்களை அழித்தது.

சுமார் 80 அடி ஆழமுள்ள ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதைகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் கொண்டவை. இந்த சுரங்கத்தில் ராணுவ கட்டுப்பாட்டு அறைகள், ஆயுதங்கள், ராக்கெட் ஏவுகணைகள், ஏவுகணைகளை ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு ஆகியவை உள்ளன.

ஹமாஸால் கட்டப்பட்ட சுரங்கப்பாதைகள் 186 மைல்கள் நீளமும் 50 முதல் 200 அடி ஆழமும் கொண்டவை. சராசரியாக ஒவ்வொரு சுரங்கப்பாதையும் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டது.

2020 ஆம் ஆண்டிலேயே, இஸ்ரேலிய இராணுவம் 230 அடி ஆழத்தில் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தது. சராசரியாக ஒரு சுரங்கப்பாதை அமைக்க 350 டிரக் கட்டுமான பொருட்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 86 வீடுகள், 7 பள்ளிவாசல்கள், 6 பாடசாலைகள், 19 வைத்தியசாலைகள் கட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கங்களில் மின்சாரம் மற்றும் காற்றோட்டம் உள்ளது. குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சமையலறைகளுடன் படுக்கையறைகள் உள்ளன. இவை அனைத்தும் நீண்ட காலம் இந்த சுரங்கங்களில் நிலத்தடியில் இருக்க உதவுகின்றன.

ஹமாஸை விட மிக நீளமான மற்றும் ஆழமான சுரங்கப்பாதைகளை ஹிஸ்புல்லா அமைத்துள்ளது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை, அவற்றில் பல இஸ்ரேலிய நகரங்களுடன் தொடர்புடையவை.

லண்டனின் நிலத்தடி ரயில்வேயை விட நீளமான ஹெஸ்பொல்லாவின் சுரங்கப்பாதைகள், வட கொரியாவின் சுரங்கப்பாதைகளை தென் கொரியாவுக்கு நினைவூட்டுகின்றன. வட கொரிய இராணுவ அதிகாரிகள் ஹெஸ்புல்லா தலைவர்களை சந்தித்ததாக இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் டாப்னே ரிச்மண்ட்-பாரக் கூறினார்.

ஹெஸ்புல்லா ஈரானிடம் இருந்து நிலத்தடியில் சுரங்கம் அமைக்கும் கலையை கற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஈரான் அணுமின் நிலையங்களை ரகசிய சுரங்கங்களில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஐ

SIS தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி சுரங்கப்பாதையில் சுட்டுக் கொல்லப்பட்டார்; சதாம் உசேன் சுரங்கத்தில் இருந்து பிடிபட்டார். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி அமெரிக்க பிடியில் இருந்து பலமுறை தப்பித்து வந்துள்ளார்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் பூமிக்கு அடியில் கட்டிய சுரங்கப்பாதைகளை அழிக்கும் இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதைகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 65 அடி நிலத்தடி சுரங்கப்பாதையின் பதுங்கு குழியில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதன் மூலம் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரானுக்கும் எவ்வளவு ஆழமாக மறைந்தாலும் விடமாட்டோம் என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here