WhatsApp Channel
பாஜகவுடனான கூட்டணியை முறிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.கவுடன் இனி கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டேன். பாஜகவுடனான கூட்டணியை முறிப்பது 2 கோடி தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிந்தது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்; எந்த மாற்றமும் இல்லை. தீர்மானத்தின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.
தமிழக பா.ஜ., தலைவரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட எந்த கோரிக்கையையும் அதிமுக முன்வைக்கவில்லை. கூட்டணி தொடர விருப்பம் என்று கூறுவதை என்னவென்று சொல்வது?. கூட்டணி தொடரும் என்று வி.பி.துரைசாமி கூறியிருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது. வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அமைக்கும் கூட்டணி, 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் பொய் சொல்கிறார்.
தொகுதி நலனுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை எம்எல்ஏக்கள் சந்தித்தனர். தி.மு.க அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமா? தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் திமுகவும் பங்கேற்கிறது.
காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம்; விவசாயிகளின் நலனுக்காக அல்ல. பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நாடகம் அல்ல; கூட்டணி விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணிதான் நாடகம். இந்தியக் கூட்டணி ஒரு நாடகம், இன்னும் முழு வடிவம் பெறவில்லை.
அவர் கூறியது இதுதான்.
Discussion about this post