தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடந்தேறியது… அண்ணாமலை

0

இன்றைய தினம் காலை, தமிழக பாஜக மாநிலச் செயற்குழு கூட்டம், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.சௌஹான் சிவராஜ் அவர்களும், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு.எல்முருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கடுமையாக உழைத்து, கட்சியைப் பலப்படுத்தியுள்ளனர். திமுக அரசால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகியும், சோர்ந்து விடாமல் தங்கள் அரிய உழைப்பைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவருக்கும், மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது மிக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது. தினம் ஒரு கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதுமே, சாமானிய மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம், தமிழகம் முழுவதுமே ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவற்றைப் பற்றி ஆளும் திமுக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழக பாஜக தொண்டர்களைக் கைது செய்து துன்புறுத்துவதற்காக மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பாஜக சகோதர சகோதரிகள், திமுக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையிலும், பாஜகவினர் தொழில்களிலும், திமுக தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறது.

மக்கள் விரோத திமுக ஆட்சியைத் தூக்கி எறியும் நாள் தொலைவில் இல்லை. தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த, விவசாயிகள், இளைஞர்கள் நலன் சார்ந்த ஆட்சியை, பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். எனவே நாம் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைப்போம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மிக மோசமான நிலையில் தமிழகத்தைத் தள்ளியிருக்கும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். அதற்கான தொடர் உழைப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வழங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here