தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிமுகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆர்த்திராஜ் தலைமையில் கலந்து கொண்டவர்கள் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.