விஜய் கட்சி ஆரம்பித்தது அவசியமா? தேவையற்றதா? என்பதை தமிழக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். விஜய்யின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்றால் என்ன? தேசிய பாதையில் செல்கிறீர்களா? அல்லது மாநில வாதம் பற்றி பேசப் போகிறீர்களா? அவர் கொள்கையை அறிவித்த பிறகே தெரியவரும்.
பெரியாரின் உருவம் இருப்பதால் தேசியம், தெய்வீகம் ஆகியவற்றுக்கு இடமில்லை, எனவே அதை எடுக்க வேண்டும் என்றார்.
ஆளுநருக்கு மன்னிப்பு மட்டுமே தெரியும் என்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவறு செய்தவர் உதயநிதி ஸ்டாலின். தேசியத்தை தீவிரமாகக் கருதுபவர்கள்தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்பளிப்பார்கள் என்றார்.
மேலும், தூர்தர்ஷன் விழாவில் கவர்னர் பாடவில்லை, தூர்தர்ஷன் தொழிலாளர்கள் பாடினார்கள் ஆனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று முதல்வர் கூறினார். இப்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்குவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர் பிராட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் சத்யேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.