WhatsApp Channel
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை முடிவடைந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதுவரை நடந்த 5 லீக் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் நடக்கிறது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியிலும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்.
வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது காயம் அடைந்த பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
லக்னோ மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷமி அல்லது சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அஷ்வின் களமிறங்க வாய்ப்பு அதிகம்.
Discussion about this post