WhatsApp Channel
பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மேலும், பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், காலை அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Discussion about this post