WhatsApp Channel
கனல் கண்ணன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
திரைப்பட சண்டை பயிற்சியாளரான கனல் கண்ணன், இந்து முன்னணி நிர்வாகியாகவும், பாஜக ஆதரவாளராகவும் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில் நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஒரு மத போதகர் ஒரு பெண்ணுடன் நடனமாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பதிவு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அவர் மீதான புகார்தாரர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும், புகார் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். அந்த வீடியோவை மட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. ட்விட்டரில் கூறிய கருத்துகள் யாரையும் பாதிக்கவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்து காவல்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி நாகார்ஜுனா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Discussion about this post