WhatsApp Channel
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மினி புல்லட் ரயில் எனப்படும் வந்தே பாரத் ரயில் நவம்பர் 11ம் தேதி முதல் மைசூரு-சென்னை இடையே இயக்கப்படுகிறது.இதேபோல் கோவை-சென்னை இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இதையடுத்து தென் மாவட்ட பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் வந்தேபாரத் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 650 கி.மீ. தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பயணிகள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பயணம் செய்தனர்.
இந்நிலையில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. வந்தேபாரத் ரயில் கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய தேதிகளுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்தன. பின்னர் செய்யப்பட்ட பதிவுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படும். பயணிகளின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 2ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post