தமிழ்நாட்டில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் 29 ஆம் தேதிக்குள் வெளியேற தமிழக அரசு காலக்கெடு விதித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, குடியுரிமைத் துறை அதிகாரிகள் சார்க் விசாக்கள் மூலம் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து சம்மன் அனுப்பி, பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை உட்பட தமிழ்நாட்டில் தங்கியுள்ள 250 பாகிஸ்தானியர்களுக்கும் குடியுரிமைத் துறை அதிகாரிகள் 29 ஆம் தேதிக்குள் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், பாகிஸ்தானியர்கள் வெளியேறுகிறார்களா? மாநில உளவுத்துறை போலீசாரின் உதவியுடன் குடியுரிமைத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.