• About us
  • Privacy Policy
  • Contact
செவ்வாய்க்கிழமை, ஜூலை 15, 2025
AthibAn Tv
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AthibAn Tv
No Result
View All Result
Home Tamil-Nadu

திமுக அரசு நிவாரண உதவி வழங்குவதில் சரியான நடவடிக்கை இல்லை….

AthibAn Tv by AthibAn Tv
மே 21, 2021
in Tamil-Nadu
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X
 

கொரோனா நிவாரண உதவிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த தேவராஜ். இவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் மாநில முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் அறிவித்து அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பொது வெளியில் கூட கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முந்தைய அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது அரசியல் கட்சியினர் அரசு வழக்கும் நிதியில் தலையீடுவது, நியாய விலை கடைகளில் பதாகை வைப்பது, நிவாரண நிதியை வழங்கும் போது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஆளும் கட்சியின் நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் எந்தவிதத்திலும் பங்கேற்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவு தற்போதும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தற்பொழுது கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறன்றனர். சென்னை ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகளையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை வழங்கு வருகின்றனர். ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தற்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள நியாய விலை கடைகளுக்கு திமுக நிர்வாகிகளை பெருங்கூட்டமாக அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று திமுக சின்னம் கொடி பொறித்த பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் போதிய சமூக இடைவெளியின்றி ஆளும்கட்சியினர் சபாநாயகருடன் நின்றபடி கரோனா நிதி வழங்கி வருகின்றனர். கொரோனா நிதி வழங்கல் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவினையும் அப்பட்டமாக மீறியுள்ளார். எனவே சமூக இடைவெளி, அரசு நீதி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாம் இருக்க வேண்டும் நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்களடங்கிய நிவாரண தொகுப்பு பை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அவ்வாறு வழங்கும்போது பொதுமக்கள் நியாய விலை கடைகளில் அதிக அளவில் கூடி கொரோனா தொற்று மேலும் தமிழகத்தில் அதிக அளவில் பரவிடும் அபாயம் உள்ளது. ஆகவே உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும், இந்த நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா நிவாரண நிதி வழங்கும் போது விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை, நிவாரண நிதிக்காகன டோக்கன் வழங்கும் போது அரசியல் விழாவை போல ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர். நிகழ்ச்சியில் பலர் மாஸ்க் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஆளும் கட்சியிர் மதிக்காமல் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், கொரோனா காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் பல உள்ளன. நிவாரணம் வழங்குவதை அரசியலாக்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். கரோனா விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விதிகளை மீறுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்குவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து விளக்கமளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Related

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
dmk

உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 15, 2025
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
dmk

உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 15, 2025
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

ABOUT US

AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் அதிபன் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aiathibantv@gmail.com

Recent News

  • உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
  • நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
  • சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.