பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் கொல்லப்பட்ட 18 பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்கில் பலுசிஸ்தான் முதல்வர் கலந்து கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த வீரர்களையும் அவர் சந்தித்து அவர்களின் நலம் விசாரித்தார். பயங்கரவாதிகளுடனான மோதலில் 18 வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.