காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
காபூலில் உள்ள கலா-உ-பக்தியார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.