கருங்கடலில் போர் நிறுத்த ஒப்பந்தம் – ரஷ்யா, உக்ரைன் இணக்கம்!
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, வாணிபக் கப்பல்களை ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் ரஷியாவின் பிரதிநிதிகள் துபாயில் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கருங்கடலில் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.