பாகிஸ்தான் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது… பொருளாதாரம் திவாலாகி வருகிறது – சாப்பிடக்கூட வழியில்லை…!

0

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் போருக்கு அதன் தயார்பு – ஒரு ஆய்வு

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் பின்னணியில், பாகிஸ்தானின் பதிலடி பேச்சுகள் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளன. ஆனால், இந்த வலுவான பேச்சுகளுக்குப் பின்னால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சிக்கல்களில் சிக்கி உழன்று வருகிறது என்பது சீரிய உண்மை.

2023ம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் சென்றது. சர்வதேச நிதி ஆணையத்தின் (IMF) ஆதரவின்றி நாட்டை நிர்வகிக்க இயலாத நிலைக்கே அது சென்றது. கடன் வசதிகளைப் பெற அரசுப் பணியிடங்களை குறைப்பது, சில அமைச்சகங்களை மூடுவது, விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தனியார்மயமாக்குவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அத்துடன், வரி வசூலை அதிகரிக்க புதிய மக்கள் வரி வலையில் கொண்டுவரப்பட்டனர். இதனால் 2024ம் ஆண்டு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக இரட்டிப்பு அடைந்தது. ஆனால், இதில் பெரும்பான்மையாக சம்பளம் வாங்கும் சாதாரண மக்கள் மீது தான் வரி சுமை போடப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள், மிகக் குறைந்த அளவிலேயே வரி செலுத்துகின்றனர். இது வரி சமத்துவத்தை மீறிய சீரற்ற கட்டமைப்பை காட்டுகிறது.

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 374 பில்லியன் டாலர் மட்டுமே. இந்தியாவின் மொத்த GDP 4.2 டிரில்லியன் டாலராக உள்ளது. அதுவும் சிறப்பம்சமாக, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் GDP மட்டும் 42.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. பாகிஸ்தானின் முழு நாட்டின் GDPயை விட இது 11 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். தமிழ்நாட்டின் GDP கூட 30 லட்சம் கோடியை நெருங்குகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் எதிர்காலத்தில் முழுமையான போர் நிலையை சந்திக்கத் தயாரா? என்ற கேள்வி எழுகிறது. பாகிஸ்தானின் 2025–26 பட்ஜெட்டில் இராணுவ செலவுகள் 18% அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால், தற்போதைய பொருளாதார வளம் இதற்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலான வருமானம் கடந்த காலக் கடன்களைச் செலுத்தவே செலவாகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஒரு நீண்ட கால போரை சந்திக்க முடியுமா என்ற கேள்விக்கு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் “இல்லை” என பதிலளிக்கின்றனர். வலுவான உள்நாட்டுப் பின் ஆதரவின்றி, ஆளும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் சமாதானக் கூட்டாண்மைதான் தற்போது நிலைநாட்டப்பட முயற்சிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here