IMF ஒப்புதியில் பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி கடன் – இந்தியா கண்டனம்

0

IMF ஒப்புதியில் பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி கடன் – இந்தியா கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், சர்வதேச நிதி ஆணையமான IMF (International Monetary Fund) பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி மதிப்பிலான (சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் தற்போது தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்நாட்டு நாணய மதிப்பு சரிந்துள்ளது, கையிருப்பு பணம் வெகுவாகக் குறைந்துள்ளது, மக்கள் தினசரி தேவைக்கே உணவுப்பொருட்களுக்காக போராடும் நிலை காணப்படுகிறது. இதனைத் தாண்டி மீள்பெற பாகிஸ்தான் IMF-யிடம் கடன் கோரியது.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நடைபெற்ற IMF கூட்டத்தில், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் கடன் தொகையை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக முன்வைத்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை பகுதிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை எடுத்துக்காட்டி, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவின் கருத்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், IMF இந்த கடனை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கும் முடிவை கடுமையாகக் கண்டித்து, “இந்த நிதி, இந்தியாவை அழிக்க பயங்கர அமைப்புகளுக்கு ஆதரவாகப் பயன்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கடந்த வாரம் மட்டுமே இந்திய எல்லைப் பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, ரஜோரி, பூஞ்ச், உரி, டாங்தார் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய இராணுவம் வலுவான பதிலடி கொடுத்து வெற்றிகரமாக தடுக்கியுள்ளது.

1958 முதல் பாகிஸ்தான் IMF-யிடம் கடன் பெற்றுவருகிறது. கடந்த 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் பாகிஸ்தான் IMF உதவியிலேயே நாடு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிதிகள் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படாமல், பெரும்பாலும் இராணுவ செலவுகளுக்கே சென்றுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன.

இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் பட்ஜெட்டில் இராணுவ செலவுகள் மட்டும் 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியையும் இராணுவம் விழுங்கிவிடுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மீள சாத்தியம் குறைவாகவே உள்ளது.

உலக நாடுகள் பாகிஸ்தானின் இந்த நிலையை கவனிக்கத் தொடங்கியுள்ளன. பயங்கரவாத ஆதரவுக்கு நிலையான தேசமாக உள்ள பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி உதவி வழங்கப்படுவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, இதை எதிர்த்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கையுடன் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here