WhatsApp Channel
ஓய்வில் இருந்து வெளியே வந்து மீண்டும் விளையாட முடிவு செய்துள்ளதாக முகமது அமீர் அறிவித்துள்ளார்.
ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு திரும்பிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், 2021ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், முன்னணி வீரரான முகமது ஆமிர், ஓய்வில் இருந்து வெளியே வந்து மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்த பிறகு, ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடலாம் என்று கூறினார்.
டி20 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு திரும்பும் அவர், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டால், நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வலுவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post