WhatsApp Channel
பலியானவர்களில் பலர் மினி பஸ்சில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா மற்றும் கேவியாவோ நகரங்களுக்கு இடையேயான மத்திய சாலையில் நேற்று இரவு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மினி பஸ் திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பலியானவர்களில் பலர் மினி பஸ்சில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.
Discussion about this post