WhatsApp Channel
மங்கோலியாவில் சாலைகள் மற்றும் தெருக்கள் எல்லா இடங்களிலும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், சாலைகள், தெருக்கள் எங்கும் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எனவே வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுக்பதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்போது சாலையில் பனியில் கார் சிக்கிக் கொண்டது. தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து காரை மீட்டனர். ஆனால், காரில் இருந்த 4 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Discussion about this post