நடப்பு ஆண்டின் மத்திய பட்ஜெட் பொதுமக்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதற்கு முன்பு, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
“2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் நோக்கில் இந்த மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
மேலும், 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய மக்களின் வாழ்வில் ஒரு புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்களை கொண்டு வருவதோடு, அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தயாராகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.