டெல்லி அரசின் கருவூலத்தை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி துவாரகா பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, டெல்லிக்கு இப்போது இரட்டை எஞ்சின் அரசு தேவை என்றும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தால், டெல்லியின் வளர்ச்சி பின்தங்கி மோசமாகிவிடும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
டெல்லி அரசின் கருவூலத்தை காலி செய்ததற்காக ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, டெல்லியில் பாஜக பணியாற்ற பொதுமக்களிடம் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.