பயத்தைப் போக்கவே நான் பாஜகவுக்கு வாக்களித்தேன்… மௌலானா சாஜித் ரஷிதி…!

0

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களிடையே உள்ள அச்சத்தைப் போக்கவே பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி கூறியுள்ளார்.

அவர் பதிவிட்ட வீடியோ பதிவில்,

பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும்,

இந்த முறை அந்த அச்சத்தைப் போக்கவே பாஜகவுக்கு வாக்களித்ததாகவும் மௌலானா சாஜித் ரஷிதி கூறினார்.

அதேபோல், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் பாஜகவை ஆதரித்தால், மதச்சார்பற்றவர்கள் என்று கூறும் அரசியல் கட்சிகள் அசைந்துவிடும், மேலும் அந்த வீடியோவில், டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் நபராக தான் இருப்பேன் என்று மௌலானா சாஜித் ரஷிதி உறுதியளித்துள்ளார்.

பாஜக குறித்து முஸ்லிம்களிடையே எழுந்துள்ள அச்சமே இந்த வீடியோவை வெளியிடக் காரணம் என்றும்,

முஸ்லிம்கள் எவ்வளவு காலம் பயத்தில் வாழ முடியும் என்றும் கேட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here