தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு… ரயில்வே அமைச்சர் வி.சோமண்ணா

0

பட்டுக்கோட்டை-தஞ்சாவூர்-அரியலூர் ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தினால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கூறியுள்ளார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி அதிகம் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 1,303 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 687 ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும், அரசியல் செய்யாமல் மத்திய அரசு பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here