இந்தியா உலகத்திற்கு புதிய பொருளாதார திசையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்

நாடு முன்னேற்ற பாதையில் சாதனை புரிந்து வரும் நிலையிலே, டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பல்வேறு உலகளாவிய உச்சி மாநாடுகளில் இந்தியா முக்கிய பங்கேற்று, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நாட்டாக உருவெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் கவனித்ததாகவும், இது இந்தியாவின் ஆன்மீக சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இதனுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, முதலீடு மற்றும் வணிக வளாக வளர்ச்சி ஆகியவை உலகின் முக்கிய நாடுகளால் பாராட்டப்படும் நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கீழ்த்திசையில் இருந்து மேலே எழும் சக்தியாக இந்தியா முன்னேறி வரும் இந்நிலையில், உலக நாடுகள் இந்தியாவுடன் சிறப்பான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

Facebook Comments Box