கிள்ளியூர் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், முன்மொழி கொள்கையை ஆதரித்து மக்களிடையே கையெழுத்து சேகரிப்பு…

0

கன்யாகுமரி மாவட்டம், கிள்ளியூர் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில், முன்மொழி கொள்கையை ஆதரித்து மக்களிடையே கையெழுத்து சேகரிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கிள்ளியூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் திரு.சுந்தரபால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பல்வேறு பகுதியிலிருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, மக்களிடம் முன்மொழி கொள்கையின் முக்கியத்துவத்தை விளக்கி, கையெழுத்து சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஆதரித்து, தேசிய வளர்ச்சியில் பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், எதிர்கால தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்காக, கட்சியின் நிலைப்பாட்டையும், செயல் திட்டங்களையும் பொதுமக்களிடம் விளக்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்பாளர் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்வு, பாஜகவின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here