மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய தமிழக பட்ஜெட்… ஜி.கே. வாசன் கண்டனம்

0

தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் உறுதியான அறிவிப்புகள் இல்லாதது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், தமிழக அரசு வழங்கியுள்ள பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சாதகமாக இல்லை என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு வார்த்தை தொகுப்பாகவே அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், பட்ஜெட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் தொடர்பான எந்தவிதமான முக்கிய அறிவிப்புகளும் இல்லாததை விமர்சித்த அவர், தமிழக அரசு மக்களின் தேவைகளை தீர்க்காமல், மத்திய அரசை குறை கூறும் நோக்கத்திலேயே இந்த பட்ஜெட்டை உருவாக்கியுள்ளதாக கருத்து தெரிவித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய திட்டங்களை கொண்டுவரும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here