புதிய வருமான வரி விதிப்புகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஆண்டிற்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி சலுகை வழங்கப்படும். இந்த புதிய வரி திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக பயனடைவார்கள்.
புதிய வரி விதிப்பின் கீழ், வருமான வரி தொடர்பான மாற்றங்கள் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரி கட்டுப்பாடு எளிதாகி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரி திட்டம் நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.