WhatsApp Channel
விடுமுறை அறிவிப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கடந்த 4ம் தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் விடுதியில் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுமுறை குறித்து, கல்லூரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்), வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மையங்களாக செயல்பட்டு வருகின்றன. நிவாரண மையங்களாக செயல்படும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post