தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர்கள் நாட்டிற்குள் நுழைய முடியாது… அமித்ஷா

0

உள்துறை அமைச்சர் அமித்ஷா: தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர்கள் நாட்டிற்குள் நுழைய முடியாது!

மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா – 2025 தொடர்பாக உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் குடியேற்றக் கொள்கைகள் குறித்து பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமித்ஷாவின் முக்கிய உரை:

  • குடியேற்ற மசோதா – 2025 நாடு எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.
  • இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • நாட்டின் பாதுகாப்புக்காக இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினரை கண்காணிக்கும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
  • அமைதியை சீர்குலைக்கும் எந்த செயல்களையும் சகித்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற விரும்புவோரை இந்தியா எப்போதும் வரவேற்கும் என்றும் அமித்ஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here