உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ தாக்குதல்: 41 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்ட பின்னணி

0

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ தாக்குதல்: 41 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்ட பின்னணி

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்னும் ரகசிய நடவடிக்கையின் மூலம் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்துவருகிறது. சமீப நாட்களாக இந்த போர் மிகுந்த தாக்கத்துடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா மற்றும் அமூர் எனும் ஐந்து விமானப்படைத் தளங்களை ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் டியு-95, டியு-22 போன்ற ரஷ்யாவின் முன்னோடியான விமானங்கள் உட்பட 41 போர் விமானங்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதைத் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதி செய்ததுடன், தாக்குதலை வெற்றிகரமாக முடித்த ராணுவத்தை பாராட்டினார். இது கடந்த 18 மாதங்களாக திட்டமிட்ட நடவடிக்கையின் விளைவாகும் என அவர் கூறினார்.

உக்ரைன் ராணுவ தகவல்களின்படி, ரஷ்ய விமான தளங்கள் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அவற்றை குறிவைத்து தாக்குவது மிகக் கடினம். எனினும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட மிகுந்த தாக்கத்துடன் கூடிய நடவடிக்கை என கூறப்படுகிறது.

ரஷ்யா சைதிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ட்ரோன்கள் சிக்கலான முறையில் நாட்டுக்குள் கடத்தப்பட்டு, செல்யாபின்ஸ்க் நகரில் ஒளித்து வைக்கப்பட்டு, பின்னர் லாரிகளில் விமான தளங்களுக்குச் சென்றுள்ளன. ஒவ்வொரு லாரியும் நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன்களை வெளியே விட ஏற்பாடாக இருந்தது.

இதில் ஒரு லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த நடவடிக்கையில்உபயோகிக்கப்பட்ட அனைத்து லாரிகளும் ஆர்டம் எனும் நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யா இந்த தாக்குதலை தீவிரவாத நடவடிக்கையாக கூறி பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்ததாவது: ரஷ்ய விமான தளங்களில் விமானங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டதால்தான் ட்ரோன்கள் எளிதாக தாக்கம் செய்ய முடிந்தது. மேலும், உக்ரைனின் செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் விமானங்களின் பெட்ரோல் டேங்குகளை குறிவைத்து தாக்கும் திறன் பெற்றவை.

41 விமானங்கள் சுமார் ₹4,000 கோடி மதிப்புடையவை என்றும், ஒவ்வொரு ட்ரோனுக்கும் ₹40,000 மட்டுமே செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 117 தற்கொலை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைப்பது நோக்கமாக இருக்கலாம் என்றும், எதிர்காலத்தில் போர் அதிகமாக தீவிரமாகும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதலுக்கான ஆலோசனைகளை ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும், உக்ரைனின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பானை தாக்கிய சூழ்நிலையை ஒத்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here