பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
ஆர்சிபி அணி தனது முதலாவது ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாட, புதன்கிழமை அன்று பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடினர். விழா நடக்கும் இடத்தில் ஒரே நேரத்தில் மக்கள் அதிக அளவில் நுழைய முயற்சித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், “பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தது மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய என் பிரார்த்தனை” என்று தெரிவித்துள்ளார்.