ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 விமானங்கள் அழிப்பு

0

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் கடும் பதிலடிகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குச் சேர்ந்த 9 விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, மே மாதம் ஆரம்பத்தில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்ததும், பாகிஸ்தானின் வான்படை மற்றும் தரைப்படை சார்ந்த பல்வேறு சொத்துகள் பெரிதும் சேதமடைந்தன. விமானப்படையின் தாக்குதலின்போது, பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. மேலும், இரண்டு உயர் திறனுடைய கண்காணிப்பு விமானங்களும் அழிக்கப்பட்டன. ட்ரோனின் உதவியுடன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி, C-130 ஹெர்குலீஸ் போக்குவரத்து விமானமும் அழிக்கப்பட்டது.

மொத்தமாகப் பார்த்தால், பாகிஸ்தானின் 9 விமானங்கள் இந்த சிந்தூர் நடவடிக்கையின் போது சேதமாகின. அதிலிருந்து முக்கியமானதாய் கருதப்படுவது, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 2 உயர்தர கண்காணிப்பு விமானங்களை நோக்கி துல்லியமாகத் தாக்கி அழித்தது. இது நான்கு நாட்கள் நீண்ட போரின் முக்கியத்துவமிக்க கட்டமாகக் கருதப்படுகிறது.

மே 10ஆம் தேதி பிற்பகலில், நிலைமையின் தீவிரத்தையும், சர்வதேச அழுத்தங்களையும் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் டிஜிஎம்ஓ மேஜர் ஜெனரல் காஷிப் அப்துல்லா, இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயாவைத் தொடர்புகொண்டு உடனடியாக போர்நிறுத்தம் வேண்டி கேட்டார். அதன் விளைவாக, இந்தியா தற்காலிகமாக தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் சிக்கலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இந்தியா மிக கடுமையான பதிலடி நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாகவும் எச்சரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here