பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு

0

பெங்களூருவில் நிகழ்ந்த துயரமான நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றியைக் கொண்டாட நேற்று பெங்களூருவில் நடந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஆர்சிபி அணியின் நிர்வாகமும் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஜூன் 5ஆம் தேதி அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவ ‘RCB Cares’ எனும் நிதி திட்டம் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெங்களூருவில் நேற்று நடந்த துயரமான சம்பவம் எங்களுக்கெல்லாம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் நோக்கத்தில் ‘RCB Cares’ திட்டம் அமல்படுத்தப்படும். எங்களின் முயற்சிகளில் ரசிகர்கள் எப்போதும் முக்கிய பங்காற்றுவார்கள். இந்த சோதனை நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நின்று ஆதரவு வழங்க வேண்டும்,” என தெரிவித்துள்ளது.

பிசிசிஐ மன்னிப்பு கோரியது:

இதற்கு முன் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், “இந்தச் சம்பவம் எனக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விழா நடத்தப்படுவதில் ஏற்பாடு குறைபாடுகள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். இது எதிர்காலத்துக்கு தவறான எடுத்துக்காட்டாக இருக்கக்கூடாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here