இந்தியா முழுவதும் சமீபத்தில் 564 புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கால இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 மற்றும் சமீபத்தில் கண்டறியப்பட்ட என்.பி.1.8.1 எனும் புதிய வகை வைரஸ்கள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 564 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது சிகிச்சையில் உள்ளோரில் கேரளா (1,487) முதன்மையான மாநிலமாக உள்ளது. அதன் பின்வரிசையில் மகாராஷ்டிரா (526), குஜராத் (508), டெல்லி (562), மேற்கு வங்கம் (538), கர்நாடகா (436), தமிழ்நாடு (213) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகவும், கூடுதல் நோய்களுடன் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் 106 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 1 ஆக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 7 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் 17 பேர் ஆகியுள்ளனர்.