கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

0

இலங்கையின் தலைநகரமான கொழும்புவிலிருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி புறப்பட்ட, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சீன நிறுவனத்தின் “எம்வி வான் ஹை 503” எனும் சரக்குக் கப்பல் மும்பையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

இந்தக் கப்பல், கேரளத்தின் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் துறைமுகங்களுக்கு இடையே உள்ள நடுக்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பேய்பூர் கடற்கரையை இருந்து வடக்கே 70 கடல் மைல்கள் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படை இணைந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தக் கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்தனர், இதில் 18 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த 18 பேரில் 14 பேர் சீனப் பிரஜைகள். மீதமுள்ள நால்வரை தற்போது காணவில்லை என்றும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படையின் மீட்புப்பணிக்கு சீன அரசு நன்றியை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட அறிக்கையில், “கப்பலில் இருந்த 22 பேரில் 14 பேர் சீனர்கள் மற்றும் 6 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய வாழ்த்துகிறோம். மீட்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடையட்டும்,” என தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஏற்பட்ட தீவிபத்தில், கப்பலில் ஏற்பட்ட தீ 40 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here