அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்த படத்தை பார்த்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த பாராட்டுகளை, இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். மேலும், இயக்குநருடன் ரஜினி தொலைபேசியில் பேசிய போது எடுத்த புகைப்படத்தையும் அபிஷன் ஜீவிந்த் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்தை நேரில் சந்திக்க பெற்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குநர் அபிஷன். அவர் கூறியதாவது:
“நான் சினிமாவுக்குள் வந்ததற்கான காரணம் இன்று ஒரு பூரணமாக மாறியது. ரஜினி சார் என் பெயரை அழைத்து கட்டிப்பிடித்த தருணம் என்னை மிக அதிகமாக உணர்வுபூர்வமாக மாற்றியது. அவரின் புன்னகையில், என் சிறுவயது கனவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்தது. அது தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் தான் வந்தது போல உணர்ந்தேன்.
ரஜினிகாந்த் சார் என்பவர் எளிமையின் மாதிரியும், பெருமையின் அடையாளமும். அவரிடம் நேரில் ஆசீர்வாதம் பெறுவதற்கும், இந்த தருணத்திற்கும் மேல் என் வாழ்க்கையில் வேறு எந்த ஊக்கமோ தேவை இல்லை. உங்களை என்றும் நேசிக்கிறேன் ரஜினி சார்.
இந்த சந்திப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. சௌந்தர்யா மேடம் – உங்களை சந்தித்ததிலும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி!”