இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் ஹெட்டிங்லியில், வரும் 20ம் தேதி தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் கூறியதாவது: இப்போது இங்கிலாந்து பயணித்துள்ள இந்திய அணியில், அதிக அனுபவமுள்ள வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அவர்கள் அணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது உள்ள அணியில் பெரும்பாலானவர்கள் மிகக் குறைவான டெஸ்ட் அனுபவம் கொண்டவர்கள்.
இதே சமயம், இந்திய அணியில் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா உள்ளார். அவர் அங்கு எப்படி வெளிப்படுகிறார் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.
இந்த அணியில் பல இளம் வீரர்கள் இணைந்துள்ளனர். எனவே இங்கிலாந்து மண்ணில் இந்தியா வலிமையான சவாலை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் போன்றோர் திறமையுடன் விளையாடுவார்கள் என அவர் கூறினார்.