ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

0

ஏ.சி. சாதனங்களின் இயல்பான வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான அளவில் வைத்திருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடர்பாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோஹர் லால் கட்டார் அளித்த தகவலில், புவியின் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணியான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், அதன் ஒரு பகுதியாக ஏர்கண்டிஷனர் சாதனங்களில் வெப்பநிலையை தரம்சார்ந்த வகையில் நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

இக் கலந்துரையாடல் முடிந்த பின்பு, தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்படும் என்றும், அவற்றை அமைக்கும்போது மாநிலங்களின் ஈரப்பத நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் உள்ள ஏ.சி. அமைப்புகளுக்கான தரநிலைகள் குறித்து வாகன உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதே விவகாரம் குறித்து மின்சாரத் துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் கூறியதாவது:

மத்திய அரசு, நாட்டின் மின்னாற்றல் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வெப்பநிலையை ஒரே ஒரு டிகிரி செல்சியஸால் குறைத்தாலுமே சுமார் 6% மின்சாரம் சேமிக்க இயலும். நாட்டில் ஏராளமான ஏ.சி.கள் இயங்கி வருகின்றன, மேலும் ஆண்டுதோறும் புதிய ஏ.சி.கள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இதனால் எவ்வளவு மின்சாரம் சேமிக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் யூகிக்கலாம் என்றார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஏ.சி.களுக்கான இயல்பான வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை நிர்ணயிக்க, எரிசக்தி திறன் முகமை (BEE) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here