அகமதாபாத் விமான விபத்து: மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்

0

கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பைலட்டர் கேப்டன் சுமித் சபர்வாலின் உடல், இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தினரின் தகவலின்படி, கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானத்தின் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்தது. பின்னர், அவரது குடும்பத்தினரால் அந்த உடல் பவாய் பகுதியில் உள்ள ஜல் வாயு விஹார் குடியிருப்புக்குளுள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உடல் ஒரு மணி நேரத்திற்கு வீட்டில் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் சகாலா மின்தகன மையத்தில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 56 வயதான சுமித் சபர்வால், மும்பையில் தனது முதிய பெற்றோருடன் வசித்து வந்தார்.

ஜூன் 12ஆம் தேதி, லண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (ஏஐ-171), அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் அந்த விமானம் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்தனர். கூடுதலாக, அந்தக் கட்டிட வளாகத்தில் இருந்த 29 பேரும் மரணமடைந்தனர்.

அந்த விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் சேர்ந்து இயக்கியிருந்தனர். விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி, சுமித் சபர்வாலுக்கு 8,200 மணிநேரங்கள் பறக்கும் அனுபவமும், குந்தருக்கு 1,100 மணிநேர பறக்கும் அனுபவமும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here