40 எப்சி-31 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா

0

பாகிஸ்தானுக்கு சீனாவால் வழங்கப்பட உள்ள 40 ரேடாரில் காட்சியளிக்காத 5வது தலைமுறை போர் விமானங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் சேரும் வாய்ப்பு உள்ளது.

இந்திய விமானப்படையில் தற்போது ரேடாரில் சிக்காத 5வது தலைமுறை போர் விமானங்கள் இல்லை. இதற்கான தயாரிப்புகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. ‘அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட்’ (AMCA) என அழைக்கப்படும் இந்த விமானங்களை 2035ல் இந்திய விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானப்படை முன்னாள் அதிகாரி மற்றும் பாதுகாப்பு நிபுணரான குரூப் கேப்டன் அஜய் அலாவத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

“பாகிஸ்தான், சீனாவிலிருந்து 40 ஐந்தாம் தலைமுறை ரேடார் தடையில்லா போர் விமானங்களை பெற உள்ளதாக கூறப்படுகிறது. இது பெரிதாக ஆச்சரியமாக இல்லை, ஏனெனில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் விமானிகள் சீனாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். பாகிஸ்தான் பெற உள்ள விமானம் எப்சி-31 ஆகும். இது சீனாவின் ஜே-35 விமானத்துடன் ஒப்பிடும்போது, சற்றே குறைந்த திறன் கொண்டதாகும். காரணம், எந்த ஒரு நாடும் தனது மிக உயர்ந்த திறன் கொண்ட போர் விமானங்களை பிற நாட்டுக்கு வழங்காது.

பாகிஸ்தான் ஒப்பிடும்போது, இந்திய விமானப்படை நீண்ட காலமாக பலத்ததும், பயிற்சி, யுத்த உத்திகள், ஆயுத மேலாண்மை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இத்தகைய விமானங்களை சீனா வழங்கும் செய்தி கவலையளிக்கிறது. அதனால், நாமும் நம்முடைய ஐந்தாம் தலைமுறை விமான திட்டங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

ஓய்வு பெற்ற மற்றொரு அதிகாரி ஏர் மார்ஷல் சஞ்சீவ் கபூர் கூறியதாவது:

“இரு நாடுகளும் எதிரிகளை நம்பியிருக்கும் நிலையில், இந்த வகை விமானங்களை உருவாக்குவதற்காக 9 அல்லது 10 ஆண்டுகள் காத்திருப்பது சாத்தியமல்ல. எனவே இடைக்கால ஏற்பாடாக, தொழில்நுட்பம் பகிரும் ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து சுகோய் SU-57 போர் விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here