டி.ஆர். கோவிந்தராஜன் நினைவாக நடைபெறும் ஜூனியர் மகளிர் கால்பந்து தொடரில் இறுதி போட்டி இன்று!
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு கால்பந்து சங்கம் நடத்தும் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 19 அணிகள் பங்கேற்ற இந்த லீக் கட்டப்போட்டிகளில், சேலம், திருநெல்வேலி, சென்னை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
கால் இறுதி ஆட்ட முடிவுகள்:
- முதல் கால் இறுதியில், சேலம் அணி சென்னை அணியை 3-0 என வீழ்த்தியது. வர்ஷா இரண்டு கோல்கள், காவ்யா ஒரு கோல் அடித்தனர்.
- இரண்டாவது ஆட்டத்தில், நாமக்கல் அணி திருநெல்வேலியை 1-0 என்ற கணக்கில் வென்றது. துர்கா கோல் அடித்தார்.
- மூன்றாவது ஆட்டத்தில், திருவாரூர் அணி காஞ்சிபுரத்தை 6-1 என வென்றது. தர்ஷினி (2 கோல்கள்), ஐஸ்வர்யா, தர்ஷிகா, சஹானா மற்றும் அனுரி (சுய கோல்) தலா ஒரு கோல் எடுத்தனர்.
- நான்காவது ஆட்டத்தில், திண்டுக்கல் அணி திருவள்ளூரை 5-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது. பிரதிக் ஷா 4 கோல்கள், காவியா ஒரு கோல் சேர்த்தனர்.
அரை இறுதி:
- முதல் அரை இறுதியில், நாமக்கல் 1-0 என சேலத்தை தோற்கடித்தது. துர்கா மீண்டும் ஆட்ட நாயகியாக இருந்தார்.
- இரண்டாவது அரை இறுதியில், திண்டுக்கல் மற்றும் திருவாரூர் அணிகள் 2-2 என சமமாக முடித்தன. திண்டுக்கல் தரப்பில் பிரதிக் ஷா இரண்டு கோல்கள், திருவாரூர் சார்பில் சஹானா மற்றும் தர்ஷினி தலா ஒரு கோல் அடித்தனர்.
சடன் டெத்தில் திண்டுக்கல் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இறுதிப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு திண்டுக்கல் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் மற்றும் நாமக்கல் அணிகள் சாம்பியன் பதக்கத்திற்காக மோதுகின்றன.