ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை இந்தியாவில் – டிரா வெளியீடு ஜூன் 24-இல்
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர், வருகிற நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. எந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெறும் என்பது குறித்த ‘டிரா’ (டிரா விழா) நிகழ்ச்சி, ஜூன் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்தியாவுக்கு இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு 2016-ல் லக்னோவிலும், 2021-ல் புவனேஸ்வரிலும் இந்த போட்டி நடைபெற்றது. இம்முறை, அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக, தமிழக அரசு ரூ.64 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது.
இதற்கிடையில், இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ ‘லோகோ’ வெளியீட்டு விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (லோகோ) வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் மற்றும் ஏஸ்டிஏடி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.