“பும்ரா உலகின் சிறந்த பவுலர்” – பென் டக்கெட் பாராட்டு
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனது விக்கெட்டை பும்ராவிடம் இழந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட், பும்ராவை உலகின் சிறந்த பந்து வீச்சாளராக புகழ்ந்துள்ளார்.
“உலகத் தரத்திலான பவுலர் பும்ரா. அவருடைய பந்துகளை எதிர்கொள்வது மிகக் கடினம். எந்தவொரு சூழலிலும் தனது திறமையை காட்டக்கூடியவர். இந்தியாவின் பிளாட் பிச்சிலும், இங்கிலாந்தின் சூழலிலும் கூட அவரது பந்துகள் தரமானவையாகவே இருக்கும். இரண்டு பக்கங்களிலும் பந்து ஸ்விங் ஆகும் தன்மையும் அவருக்கு உண்டு,” என்று டக்கெட் கூறினார்.
“அவரால் ஏற்படும் சேதத்தை நாம் சில அளவுக்கே குறைத்துள்ளோம். இல்லையெனில் இன்னும் மோசமான நிலை ஏற்படலாம். பும்ராவை நேரில் எதிர்க்க முடியாது. ஆனால் அவரை அழுத்தத்தில் வைக்க முயற்சிக்க முடியும். தவறான லைன் மற்றும் லெங்க்தில் வரும் பந்துகளை மட்டுமே தாக்க முடியும்,” என்றும் அவர் கூறினார்.
அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், டக்கெட் மற்றும் ஆலி போப் இணைந்து 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் கட்டியதையும், அந்த ஜோடியை பும்ரா தான் முறித்து வைத்ததையும் குறிப்பிடத்தக்கது. 94 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த டக்கெட், பும்ராவிடம் தான் தனது விக்கெட்டை இழந்தார். தற்போது மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.