அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ்

0

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி, வரும் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நவம்பர் 2ஆம் தேதி வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனுக்கான கால அட்டவணையில் இந்த போட்டி சேர்க்கப்பட்டு, டபிள்யூடிஏ அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 250 தரப் புள்ளிகள் உள்ள இந்த தொடரில், ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதேபோல், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் விளையாடவுள்ளனர். கடைசியாக 2022ஆம் ஆண்டு இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போது, செக் குடியரசை சேர்ந்த லிண்டா ஃப்ருஹ்விர்டோவா ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார்.

இரட்டையர் பிரிவில், கனடாவைச் சேர்ந்த கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி மற்றும் பிரேசிலின் லூயிசா ஸ்டெஃபானி ஆகியோரின் ஜோடி சாம்பியனானது. இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here