ஈரான் அணு தளங்கள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்: பெரும் சேதம்

0

ஈரான் அணு தளங்கள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்: பெரும் சேதம்

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் முக்கியமான 3 அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் ‘ஜிபியு-57’ என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இத்தடையறா தாக்குதலில் ஈடுபட்டன.

ஈரான்–இஸ்ரேல் போர் தீவிரம்

இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் வெடித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இரு நாடுகளும் மோசமான போர் சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றன. ஈரானின் போர்டோ தளத்தில் சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அமைந்த அணு மையம் சிறிது சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ – அமெரிக்க நேரடி தாக்குதல்

‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ எனும் பெயரில் அமெரிக்கா ஈரானின் போர்டோ அணுதளத்தை குறிவைத்து நேரடி தாக்குதலுக்கு இடமளித்தது. இதில் பி-2 விமானங்கள் 14 ஜிபியு-57 வெடிகுண்டுகளை வீசியன. இதனுடன், நீர்மூழ்கிகளில் இருந்து டோமஹாக் ஏவுகணைகள் விடப்பட்டது. இவை ஈரானின் நடான்ஸ் மற்றும் இஸ்பகான் அணுதளங்களை தாக்கியது.

நரேந்திர மோடி – ஈரான் அதிபர் பேச்சு

இந்த சூழ்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மோடி கூறியதாவது: “அமைதி பேச்சுவார்த்தைகள் மூலமாக நிலைமையை சீர்செய்ய வேண்டும். இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஈரான் அரசு காட்டிய ஒத்துழைப்புக்கு நன்றி.”

ட்ரம்பின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் அணுகுண்டு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்டோம். ஈரான் அமைதிக்கு திரும்ப வேண்டும்; இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை

ஈரானில் நிகழ்ந்த தாக்குதல்களுக்குப் பிறகு, மக்கள் இடையே அணு கதிர்வீச்சு அபாயம் குறித்து அச்சம் எழுந்தது. ஆனால், சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் வளைகுடா நாடுகள் இதனை மறுத்துள்ளன. கதிர்வீச்சு நிலைகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here